Saturday, August 23, 2008

pit aug போட்டி விமர்சனங்கள்

சர்வேஸனுகிட்டே முதல்ல மன்னிப்பு கேட்டுடலாம். சும்ம கலாய்க்கதான் அப்படி ஒருபின்னூட்டம்.இதில இன்னி தேதிக்கு பதிவு மக்கள் கடைபிடிக்கிற "நேர்மை"யைதான்நானும் கடை பிடிக்கிறேன். உங்க பதில்ல நீங்க கொஞ்சம் கோபமா - சாரி- டென்ஷன்ஆகிட்ட மாதிரி தோணீத்து. அதான் இப்படி... மன்னிச்சுடுங்க!

பிட் லே உங்க படத்துக்கு ஒரு ப்ளாக் துவக்கி அதில போடுங்கன்னுசொன்னாங்களேன்னு இதை ஆரம்பிச்சேன். ஆனா முதல் பதிவு கமெண்ட் ஆகிபோச்சு. ம்ம்ம்ம்... போனா போறது.

முத்து லெட்சுமி அக்கா 11 வராத படங்களை விமரிசிக்கலியே ன்னுவருத்தப்பட்டாங்க. நியாயம்தானே!
//
முத்துலெட்சுமி-கயல்விழி said...
எப்பப்பார்த்தாலும் வேலைப்பளுவை காரணம் காட்டி ஒரு வரி விமர்சனம்அளிக்காமல் போவது பற்றி எனக்கு ரொம்பவும் வருத்தம் ( கோபம்ன்னு கூடசொல்லலாம்)//

அதுக்கு சர்வேசன் நேரம் இல்லையே; எல்லா படத்தையும் பாத்து கமெண்ட 4 மணி நேரம்ஆகுன்னு சொல்றார்.

//எங்களுக்கும் வருத்தமும் கோபமும் உண்டு. ஒரு படத்துக்கு விமர்சனம் எழுத அஞ்சுநிமிஷம் ஆகும்னா கூட, 50 படத்துக்கு 4 மணி நேரம் தேவைப்படுது.
அவசரவசரமா ஒரு வரி விமர்சனம் சொன்னா, உங்களுக்கும் ப்ரயோஜனம் இருக்காது, எங்களுக்கும் நல்லாருக்காது.//

நியாயம்தானே!

அட இப்படி லொள்ளு பண்ணா என்ன செய்யறது?

இல்லீங்கோ. ரெண்டு பக்கமும் நியாயம் இருந்தா வேற என்ன செய்யறது?
அட நடுவர்கள் காமெண்ட் பண்ணாதான் காமெண்டா? அதுக்கு நாமளே செய்யலாமே! காமென்ட் செய்ய ஒரு தகுதி வேணுமானா? இல்லாவிட்டாதான் இன்னும் சௌகரியம். நாம் உளர்ரதை யாரும் ஒண்ணும் சொல்ல முடியாது. என்ன மத்தவங்க மனசு புண்படாமஇருந்தா சரி.

என்ன, ஒரு சீனரியை பாக்கிறோம். ரொம்ப அருமையா இருக்கு. ஆஹான்னு படம்எடுக்கிறோம். படம் சுமாரா வந்தாலும் நம்ம மனசிலே நாம் பாத்ததுதான் நிக்குது. அதனால நாம் நம்ம படம் நல்லா இருக்குன்னு நினைக்கிறோம்.
மத்தவங்க விமரிசனம் செஞ்சாதானே நாமளும் கத்துக்க முடியும்? நீங்களும் பூந்துவிளையாடுங்க!

இங்கே என் மனசுல பட்டதை அப்படியே சொல்றேன்.
நான் ஒண்ணும் படம் பிடிக்கிறதுல நிபுணன் இல்லை. இதை வெகு ஜன பார்வைன்னு கூட வெச்சுக்கலாம். அதனால யாரும் நல்லா இல்லைன்னு சொன்னதா வருத்தப்படவேண்டாம்.

1.அருண்: நல்லாத்தான் இருக்கு! பின்னணி ஏதோ டைல் மாதிரி இருக்கே!ஏன்?

2.ஆயில்யன் - ம்ம்ம்ம்... பச்சைப்பசேல்ன்னு இல்லை. பயிர்கள் கொஞ்சம் முத்திபோச்சு. பின் தயாரிப்புல பச்சையாக்க முடியுமா? பாக்கணும். அந்த மோட்டார் ஷெட் கொஞ்சம்கெடுக்குது.

3.தேவா. - ம்ம்ம்.. தேனீ + மலர்கள் நல்லாத்தான் இருக்கு. ஆனா கண்ணுக்கு இதமா இல்லை. ஏன்? ஓவர் எக்ஸ்போஸ்டா?

4.திவா -மலர்கள். அரை குறையா தெரியற தட்டு பிரச்சினை போல இருக்கு. கொஞ்சம் நேரம் எடுத்துக்கிட்டு சரியா அரேஞ்ச் பண்ணி எடுத்து இருக்கலாம். ரொம்பவே மோசமான படம்! :-))

5.க்ரெகரி- அட்டகாசமான படம். இதுதான் முதல்ல வரும்ன்னு பெட் கட்டலாமா? அந்த மணலை அப்படியே கால்களால சிதறவிட்டு...ஆஹா!

6.கொத்ஸ் - அக்கிரமம்! :-)) என்னடா இன்னும் கிரகணம் வரலையேன்னு முதல்ல நினைச்சேன். அப்புறம் மூளை வேலை செய்ய ஆரம்பிச்ச பிறகு அட சந்திரன்னா மெலிசா முழுக்க தெரியனுமேன்னு உத்து பாத்தா பழம் தின்னு கொட்டை போட்டு இருக்காரு! வெரி இமாஜினேடிவ் ன்னு சொன்னது சரிதான்! ஆனால் பின் புலம் - அட, அதாங்க பேக்கிரௌண்ட்- எப்படி இந்த மாதிரி வந்தது? படங்களை திருத்தலாம், வண்ணம் கூட்டலாம், வெட்டலாம் எல்லாம் சரி ; இப்படி ஒரேயடியா மாத்தலாமா? அப்ப அது போட்டோவா இருக்குமா?

7.இரவுக்கவி - அசாதாரண படம். பெரும்பாலும் ஜீரணமான மரங்கள்.... பளிங்கு மாதிரி தண்ணீ.. நல்லா இருக்கு.

8.ஜெகதீஸன் ம்ம்ம்............. பாக்க நல்லா இருக்கு. கரை ஒரே லெவல்லே வராதது உறுத்துது. எங்கே இருந்து எடுத்தாரோ. அந்த இடத்தை முடிஞ்சா மாத்தி இருக்கலாம். ம்ம்........ அதுநம்ம கையிலா இருக்கு?

9.மோகன் குமார் - கார்லேந்து எடுத்த படம். அதுக்கான லிமிடேஷன்ஸ் இருக்கு. வெளிச்சம் சரி இல்லாம போச்சு! நிறைய clutters.

10.கையேடு - இந்த மாதிரி பாதி நிறைய வெளிச்சம், பாதி இருட்டுல எப்படி படம் எடுத்து ப்ராஸஸ் செய்யறது? தெரியலை. ஏனோ படத்தை பாத்து டிப்ரெஸ் ஆயிட்டேன்.

11.கண்ணன் -பூச்சி சரியான இடத்தில அமையலை போல இருக்கு. க்ராப் செஞ்சு இருக்கலாமே?

12.கார்த்திகேயன் - வலது பக்கம் போகஸ் இல்லையே? வெளிச்சத்துக்காக பாத்தீங்களா? இப்படி மேக்ரோ எடுக்கணும்ன்னா லைட் ரிங் வெச்சுக்கச்சொல்றாரு ஜீவா.

13.மதி பாலா: நீல வண்ணம் எப்பவுமே டிப்ரெஸிங் எனக்கு. அதுதான் இங்கே அதிகமா இருக்கு. அதுவும் மீதி கலரும் கருப்பா போச்சு.

14.மணி மொழியன் - ஆமைகள். வெளிச்சம் போதலையோ? பூக்களை தூவி(?) எடுத்தது, ஆனா அந்த பூக்கள் சரியா வரலையே!

15.மழை ஷ்ரேயா: நல்ல உழைப்பு. வானவில் வரலைன்னா என்ன! ரெண்டு சூரியன் வந்துஇருக்கு.

16.கணேசன் : வானவில் வண்ணம் போட்டு எடுக்க முயற்சி செஞ்சது நல்லா இருக்கு. மத்தபடி சரியா வரலைன்னு தோணுது.

17.மு.லெ அக்கா - சர்வேஸன் சில விஷயங்கள் சொல்லிட்டாரு. இந்த பறவைகளைஎடுக்கப்பாத்து நானும் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கேன். மெல்ல கிட்ட போணாலும் பறந்துடும். ஒரே இடத்தில இருக்காது. கண்ணாடி பாக்கிற பறவை கொஞ்சம் மயங்கிஅங்கேயே நிக்குமே! போகஸ் போயிடுத்து. பறவைய எடுக்கப்பாத்து இருந்தா வெளிச்சம் போதலை. அதுக்கு என்ன செய்யறது. கிடைச்ச வெளிச்சம்அதாங்கிறீங்களா?

18.ந்யூபீ -சின்ன ஆமைகள் கிட்டே போய் இருக்கலாம். இல்லை க்ராப் செஞ்சு இருக்கலாம்.

19.நிஜமா நல்லவன் - இன்னும் ஷார்ப்பா இருந்து இருக்கலாமோ?

20.ஓவியா - முன்னே 10க்கு சொன்னதே இங்கேயும்.

21.பரிசல் - கண் நல்லா இருக்கு. உள்ளே இருக்கிற படம் கொஞ்சம் நல்லா இல்லை

22.பெரிசு- ஓரங்கள்லே வெள்ளை நாய் வால்கிட்டே போகஸ் இல்லையே. ஜூம் பண்ணி எடுத்தீங்களோ?

23.பி எம் டி - மொட்டையா இருக்கிற மரங்கள் கெடுத்துடுச்சு போல இருக்கு.

24.பட்டியன் - மஞ்சு எடுக்கப்பாத்து அதில போகஸ் இல்லாம போயிடுத்தா? மரம்தான் பிரதானமா வந்து இருக்கு.

25.ப்ரஸன்னா - அட நம்மளை படம் பிடிச்சு போட்டு இருக்காங்களே! ஆப்ஜக்ட் நடுல இல்லை.

26.புதுகை - i am partial to pictures like this!

27.ராம் - எல்லாரும் புகழராங்க. எனக்கு ஏனோ அப்பீல் ஆகலை!

28.ரா.சு - ம்ம்ம். கவரும்படியா ஏனோ இல்லை.

29.ரா.இந்த கோணல் படங்கள் ஏனோ பிடிக்காத ப்ரக்ருதி நான்.

30.ராமலக்ஷ்மி - மரத்து மேலே இருக்கிற சிவப்பு கலர் கொஞ்சம் செயற்கையா தோணுதே!

31.சரவணகுமாரன் - மேலே இருக்கிற பறவைக்கு ஆசைபட்டு ரூல் ஆப் த்ரீ விட்டுட்டீங்களா?

32.சரவணன் - மரங்கள் ஆக்கிரமிச்சுடுத்து

33.வாவ்! வேற ஒண்ணும் சொல்லத் தெரில்லே! அக்ராஸ் டயக்னல் பப்பிள் மாதிரி தெரியறது என்ன?

34.சுகவாசி - அந்த குழந்தை சுகவாசிதான். ரெண்டு பேரோட முகத்தி உணர்ச்சிகளை பாக்க முடியதது குறையா தோணுது.

35.சுமிசரன் - இந்த மாதிரி துணி கம்பியிலே மழைத்துளிகளை நானும் எடுக்கப்பார்த்துஇருக்கேன். ஆனா சரியா வரலை.

36.சூரியல் - பொண்ணு படம் நடுல வந்து இருக்கலாமோ?

37.சூர்யா - நல்லா இருக்கு சாமியோவ்!

38.ஜே - நிழல்தான் முக்கியமா காட்ட நினைச்சீங்களா?

39.தாமிரா - இந்த தங்க அரளி எனக்கு ரொம்பவே பிடிக்கும். வெளிச்சமே காணோமே!

40.தமிழ் பிரியன் - ஆப்டிகல் இல்லூஷன் தர படம். என்னது இது?

41.தங்கை லக்கி - வெளிச்சம் போதலை, இல்லை?

42.துளசி அக்கா - அந்த மலையையே எடுத்து போட்டு இருக்கலாம்!

43.வல்லி அக்கா - ரெட்டை வானவில். பிகாஸால வெளிச்சம் நிரப்பி பாத்த இன்னும் நல்லா இருக்கு. மழை மொத்த படத்தயும் சுவாரசியம் இல்லாம ஆக்கிடுத்து போல இருக்கு.

44.வெண்பூ - எதுவுமே தெளிவா தெரியலை எனக்கு!

45.கருவாயன் - மழை வந்துகிட்டு - தூரத்தில தெரியற- நேரம்தானே எடுத்தீங்க? எனக்கு பிடிச்சு இருக்கு!

வரட்டா?

9 comments:

இராம்/Raam said...

:))

திவாண்ணா said...

நிறையவே எ.பி இருக்கு. சரி செய்ய நேரமில்லை. மொத்தமா 2 மணி நேரம் ஆச்சு- படங்களை திருப்பியும் பாத்து இந்த பதிவை எழுதி போட. இப்ப நடுவர்கள் மேலே ரொம்பவே அனுதாபம் வந்திடுச்சு!
:-))

இருந்தாலும் நம் படத்தை எப்படி அடுத்தவங்க பாக்கிறாங்கன்னு தெரிஞ்சாதானே நாம் முன்னேறலாம்?

திவாண்ணா said...

:))
அட ராமா! அவ்ளோதானா?

Mani - மணிமொழியன் said...

அது பூக்கள் இல்லைங்க, ஆமைகள் இருந்த குளத்தில் மிதக்கும் இலைகள்.
ஆமை நீந்தி வரும் போது அந்த இலையெல்லாம் அந்த ஆமை மேல ஒட்டிக்குது.
விமர்சனத்துக்கு ரொம்ப நன்றிங்க !

திவாண்ணா said...

நன்றி மணி மொழியன். முதல்ல இலைன்னுதான் நினைச்சேன். அப்புறம் கொஞ்சம் குழம்பிட்டேன்.

pmt said...

உங்கள் விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றது நன்றி

யாராவது இதுபோல நல்ல வார்த்தை சொன்ன தானே நாமும் கத்துக்கலாம்.

SurveySan said...

அருமை!

///உங்க பதில்ல நீங்க கொஞ்சம் கோபமா - சாரி- டென்ஷன்ஆகிட்ட மாதிரி தோணீத்து///

அடக் கொடுமையே, எனக்கு கோபமெல்லாம் இல்லீங்க.நோ டென்ஷன். முத்துலெட்சுமி கேட்டது, நியாயமான கேள்வி.
PiT பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இங்கே மீள்-பதிவு:

=======
திவா, உங்களின் விமர்சனங்களைப் படித்தேன். நன்றி!

இப்படி, கூட்டு முயற்சியில் இழுத்தாதான் வண்டி நல்லா ஓடும் :)

அஞ்சு 'நடுவர்கள்' தான் விமர்சினக்கணும்னு ஒண்ணும் ரூல்
இல்லை.

ஒருவர் படத்தை போட்டிக்கு அனுப்பியதும், எல்லோரும், முடிந்தவரை தங்கள் கருத்தை, அந்தப் படம் பற்றி எடுத்துக் கூறினால், எல்லோரின் திறமையும் மேலெழும்.

நான் எதிர்பாக்கரதும் இதைத் தான் ;)

தொடரட்டும் பணி :)

==========

இலவசக்கொத்தனார் said...

அண்ணா,

பேக் கிரவுண்ட் எல்லாம் மாத்தலை. அது ஒரு கருப்பு கிரனைட் டைனிங் டேபிள். அந்த கிரனைடில் இருக்கும் புள்ளிகள்தான் நட்சத்திரங்கள் மாதிரி தெரியுது. பிற்சேர்கை வெறும் காண்டிராஸ்ட் அட்ஜெஸ்ட்மெண்ட்தான். வெட்டி ஒட்டும் வேலை எனக்குப் பிடிக்காது!

இந்த word verificationனை எடுத்திடுங்க.

திவாண்ணா said...

Blogger pmt said... உங்கள் விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றது நன்றி

யாராவது இதுபோல நல்ல வார்த்தை சொன்ன தானே நாமும் கத்துக்கலாம்.//

வருகைக்கு நன்றி. நீங்களும் இப்படி சொல்லப்பாருங்க.


Blogger SurveySan said...

அருமை!

///உங்க .... தோணீத்து///

// அடக் கொடுமையே, எனக்கு கோபமெல்லாம் இல்லீங்க.நோ டென்ஷன். முத்துலெட்சுமி கேட்டது, நியாயமான கேள்வி//

.ரொம்பவே சந்தோஷம்.

PiT பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இங்கே மீள்-பதிவு:

படிச்சுட்டேன்.
=======
// திவா, உங்களின் விமர்சனங்களைப் படித்தேன். நன்றி!

..........
ஒருவர் படத்தை போட்டிக்கு அனுப்பியதும், எல்லோரும், முடிந்தவரை தங்கள் கருத்தை, அந்தப் படம் பற்றி எடுத்துக் கூறினால், எல்லோரின் திறமையும் மேலெழும்.//

ப்ளாக்ல பதிவு செய்கிறது கட்டாயம்னு தோணுது. இப்ப இருக்கிற முறையில எல்லா படங்களுக்கும் எல்லாரும் விமர்சனம் செய்ய வாய்ப்பு கம்மி. அல்லது படம் வர வர பதிவிடலாம்.
==========

Blogger இலவசக்கொத்தனார் said...

அண்ணா,

பேக் கிரவுண்ட் எல்லாம் மாத்தலை. .......... வெட்டி ஒட்டும் வேலை எனக்குப் பிடிக்காது!

அடாடா! என்ன ஒரு ஐடியா சேட்ஜி! பிரமாதம். படத்துக்கு க்ரகரி. ஐடியாக்கு கொத்ஸ். செலக்டட்.

அப்படியே இந்த செலக்டிவ் லைட்டிங் பத்தி சொல்லிட்டா நாங்க கொத்ஸ்ஸடிமைகளா இருப்போம்.
நீங்க தப்பு செய்ததா சொல்ல நான் நினைக்கலை. சரியா எழுதலை. சாரி. அந்த சமயத்தில வந்த சிந்தனைகள்.


//இந்த word verificationனை எடுத்திடுங்க.//

எடுத்தாச்சு.

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers