Saturday, October 17, 2009

நாயாம் நாயாம் தெரு நாயாம்....

எங்க வீட்டுக்கு 1991 லே இவர் வந்தார்.

வயசாயிட்டது....முன்னே மாதிரி சுறு சுறுப்பா இருக்க முடியலை. கால் கொஞ்சம் ஊனம். வால் ல வா மட்டுமே இருக்கு.

இருந்தாலும் எங்க ஊர் பக்கத்திலே இருக்கிற வண்டிப்பாளையம் (ராஜபாளையம் இல்லே!) நாய் ன்னா ரொம்ப பிரசித்தின்னு இவரை படம் பிடிக்க முடிவு பண்ணிட்டேன்.

தூசி தட்டி வாசல்லே எங்கே வெக்கலாம்ன்னு தீபாவளி படி மன்றம் நடத்தி வாசகேட்டை பாத்தாப்போல வெக்க முடிவு பண்ணி கிளிக் க்ளிக் க்ளீக் ...அப்பா ஆச்சுன்னு உள்ளே வந்துட்டேன். நாயர் ச்சீ! நாயார் வெளியேவே நின்னுகிட்டு இருந்தாரா? சமீபத்திலே கண் ஆபரேஷன் பண்ணி வந்த வேலைக்காரி பதட்டத்தோட ஓடி வ்ந்தாங்க. "அம்மா அம்மா வாசல்ல ஒரு நாய் என்னை பயமுறுத்துது. கல் எடுத்தாக்கூட அசரலை... அப்படியே உக்காந்து இருக்குன்னு" ஒரே கம்ப்லைண்ட். எங்க த.மணி நான் போட்டோ எடுக்கறதை பாத்துகிட்டு இருந்தாரா! அதனால அவருக்கு புரிஞ்சு போய் ஒரே சிரிப்பு.

என்சாய்!


dog 1

[Image]
From dog


2.

[Image]
From dog


3.

[Image]
From dog

பிங்க் கலர் பெண்களுக்கு இஷ்டம் ன்னு சொன்னாங்களே! தீபா டீச்சர்தானே ஜட்ஜ்? கொஞ்சம் கா கா காக்கா பிடிக்கலாம்.
doll 1

[Image]
From doll

இன்னொரு கோணம்...
2

[Image]
From doll

25 comments:

geethasmbsvm6 said...

நாயாம், நாயாம், திருநாயாம் னு பாடுவீங்க போல! அடிச்சு ஆடுங்க, அதுசரி, பிள்ளையாரை மூணு பேரும் பேசி வச்சுட்டுப் போட்டிருக்கீங்க போல?? :)))))))))))))

ராமலக்ஷ்மி said...

முதலில் தலைப்பு. ஒரிஜனல் பாட்டின் வரி எனில் இன்றைய தினத்துக்குப் பொருத்தமானது. அதை என்னமாக உல்டா செய்து விட்டிருக்கிறீர்கள்:)!

கண் தெரியா பெண்மணியைக் கதிகலங்க வைக்கலாமா இப்படி:)?

காகாவுக்கெல்லாம் நம்ம ஜட்ஜஸ் அசர மாட்டாங்க:))!

மூணாவது doggy பின்னணியோடு நல்லாயிருக்கு. இரண்டாவது pinky-யும் ஊஞ்சல் மேலே ஜம்முன்னு இருக்கு.

போட்டிக்கு எதைக் கொடுக்கப் போகிறீர்கள் என்பதை நாளை காலை பிட் திரையில்தான் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது:)!

வாழ்த்துக்கள் வெற்றிக்கும் தீபாவளித் திருநாளுக்கும்!

ப்ரியமுடன் வசந்த் said...

//பொறிதுயில் ஆழ்த்துனர்.//

ஹ ஹ ஹா...

முதல் ரெண்டு படம் காமெடி

பிங்க் பொம்மை சூப்பரூ உங்க படத்தை PiT ல காணோமே....

திவாண்ணா said...

//பிள்ளையாரை மூணு பேரும் பேசி வச்சுட்டுப் போட்டிருக்கீங்க போல??//
இல்லேல்லே! போட்டுட்டு பேசிகிட்டோம்.
:-))
என்ன செய்யறது அவ்வளோ பாப்புலரா இருக்கார் நம்ம பிள்ளையார்.
தம் மாரே தம் கதையா போயிடப்போகுதுன்னு பயமா இருக்கு!

திவாண்ணா said...

முதலில் தலைப்பு. ஒரிஜனல் பாட்டின் வரி எனில் இன்றைய தினத்துக்குப் பொருத்தமானது. அதை என்னமாக உல்டா செய்து விட்டிருக்கிறீர்கள்:)!//

ஹிஹி நன்னி!

// கண் தெரியா பெண்மணியைக் கதிகலங்க வைக்கலாமா இப்படி:)?
//

இப்ப சாயந்திரம் பக்கத்து வீட்டு மாமியும் வந்து பாத்து அரை நிமிஷம் பயந்து போயிட்டாங்க! perhaps my photo does not do justice to what it is!

// காகாவுக்கெல்லாம் நம்ம ஜட்ஜஸ் அசர மாட்டாங்க:))!//
pinnee ethukku asaruvaangka?

// மூணாவது doggy பின்னணியோடு நல்லாயிருக்கு.//
3 ஆவதா? நான் ரெண்டாவதை ஸாப்ட் போகஸ் எல்லாம் பண்ணி வெச்சு இருக்கேன்!...
// இரண்டாவது pinky-யும் ஊஞ்சல் மேலே ஜம்முன்னு இருக்கு.//

அதையே அனுப்பலாமான்னு யோசனை! பாக்கலாம்.
இன்னிக்கு கடேசி நாள்? நாராயணா!

போட்டிக்கு எதைக் கொடுக்கப் போகிறீர்கள் என்பதை நாளை காலை பிட் திரையில்தான் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது:)!

வாழ்த்துக்கள் வெற்றிக்கும் தீபாவளித் திருநாளுக்கும்!

திவாண்ணா said...

வாங்க பிரியமுடன்...
ரெண்டும் காமெடியா? அடடா! :-))

பிட்டிலே போட்டா தானே வரும்? ( ஆமாம் photoதான் வரும்.:-)

ராமலக்ஷ்மி said...

//pinnee ethukku asaruvaangka?//

photo nalla irunthaalthaan asaruvaanka:))!!

goma said...

கால் கொஞ்சம் ஊனம். வால் ல வா மட்டுமே இருக்கு.

வா மட்டும் இருக்கு சூப்பர்...
எங்கள் வீட்டிலும் இதே போல் வெள்ளை நாய் இருந்தது ஹெச் எம் வீ டாக் மாதிரி நிற்கும்.
அந்தக் காலத்து ஹட்ச் டாக்

geethasmbsvm6 said...

//இல்லேல்லே! போட்டுட்டு பேசிகிட்டோம்.
:-))//

காப்பி அடிச்சிருக்கீங்க??? எங்கே உங்க டீச்சர்??? அவங்க வந்து மறுபடியும் மூணு பேரையும் பெஞ்சு மேலே ஏத்தப் போறாங்களே! ஹையா ஜாலி! :P:P:P:P

goma said...

காப்பி அடிச்சிருக்கீங்க??? எங்கே உங்க டீச்சர்??? அவங்க வந்து மறுபடியும் மூணு பேரையும் பெஞ்சு மேலே ஏத்தப் போறாங்களே! ஹையா ஜாலி! :P:P:P:P

கீதா
இந்த மூணு பேரையும் பெஞ்ச் மேலே நிறுத்தினா ஹையா ஜாலின்னு ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துட்டு நிக்றாங்க ,சோ...இவங்களையெல்லாம் பெஞ்சுக்குக் கீழே உக்காரச் சொல்லணும்னு கிளாஸ் லீடரான நான் பரிந்துரைத்திருக்கிறேன்

திவாண்ணா said...

கோமாக்கா, அந்த 3 ஆவது நபர் நீங்கதான்.
:-)))

ராமலக்ஷ்மி said...

திவா said...

//கோமாக்கா, அந்த 3 ஆவது நபர் நீங்கதான்.
:-)))//

:))))))))))))))))))))))!

தான் படைத்த பூரிப் ‘புள்ளையாரை’ மறந்து பூரிப்பா கொடுத்திட்டாங்க ஐடியா:)!

geethasmbsvm6 said...

//கோமாக்கா, அந்த 3 ஆவது நபர் நீங்கதான்.
:-)))//

hihihihihihihihi


//தான் படைத்த பூரிப் ‘புள்ளையாரை’ மறந்து பூரிப்பா கொடுத்திட்டாங்க ஐடியா:)!//

பூரிப் பிள்ளையார் அடிக்கடி அவங்க பதிவிலே "பூரி"ப்போட உட்கார்ந்துக்கறதாலே மறந்திருப்பாங்க போல! ஹிஹிஹிஹிஹி! பெஞ்சு மேலே நில்லுங்க. நான் பார்த்துட்டு ஹெச் எம் கிட்டேச் சொல்றேன்! :D

ராமலக்ஷ்மி said...

//நான் பார்த்துட்டு ஹெச் எம் கிட்டேச் சொல்றேன்! :D//

சீக்கிரமா பார்த்து செய்யுங்க கீதா மேடம்:)!

geethasmbsvm6 said...

டீச்சர், டீச்சர், டீஈஈஈஈஈஈஈஈச்சர், என்னோட அருமைப் பிள்ளையாரை இவங்க மூணு பேரும் காப்பி அடிச்சுட்டாங்க டீச்ச்சர்! (ஹிஹிஹி, ரா.ல. நீங்களும் மாட்டிக்கிட்டீங்களே!) :D

ராமலக்ஷ்மி said...

@ கீதா மேடம்,
அட நானும் மாட்டிக்கிட்டு நிற்பதால்தான், கால் வலிப்பதால்தான் சீக்கிரம் பார்த்து ரிலீவ் பண்ணுங்கன்னு சொன்னேன்:))! மணிக்கணக்கானால் பரவாயில்லை, நாட்கணக்கில் நிற்க விட்டிருக்கிறீர்களே:)?

geethasmbsvm6 said...

ஹிஹிஹி, நில்லுங்க, நில்லுங்க, ரா.ல. ஹெச். எம். மேடம் லீவு போல, சொல்லிக்கூட வரக் காணோமே! கோமா பாருங்க அலட்டிக்காம நிக்கிறாங்க! :D

திவாண்ணா said...

எவரு ரால?

திவாண்ணா said...

ஸ்கூல் லீவு விட்டாச்சு! எல்லாரும் வீட்டுக்கு போகலாம்!

ராமலக்ஷ்மி said...

ராமலக்ஷ்மியின் சுருக்கம்தான் செல்லமாக ரால:))!

geethasmbsvm6 said...

அதெல்லாம் போக மாட்டோம், இங்கே இருப்போம். எனக்கு ஸ்கூல் தான் பிடிக்கும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்டீச்சர், டீச்சர், இங்கே பாருங்க!

திவாண்ணா said...

ராமலக்ஷ்மிதான் ரால:))! அட! உங்களுக்கு தெலுங்கும் தெரியுமா?
ஆமா அவங்கதான் இங்கேயே நிக்கீறாங்களே? என்ன ரால ன்னு சொல்லறீங்க?

ராமலக்ஷ்மி said...

நல்ல கதையா இருக்கே:)? லீவு விட்ட பிறகு ஸ்கூலில் யாரும் இருக்கக் கூடாது. இனி அடுத்த மாதம் 15 ஆம் தேதி பிட் போட்டி முடிவு நாளில்தான் ஸ்கூல் இதே போல திறக்கும், ஆமா! ரைட் வாங்க, போய் எல்லோரும் அவரவர் வேலையைப் பார்ப்போம்! ஹாப்பி ஹாலிடேஸ்:))!

ராமலக்ஷ்மி said...

//ஆமா அவங்கதான் இங்கேயே நிக்கீறாங்களே?//

ஏதோ குழப்பத்தில் சொல்லிட்டாங்க:). லீவுக்கு ஊருக்குப் போகையில் காமிராவை மறந்திடாதீங்க:)!

அன்புடன் மலிக்கா said...

நாயாம் நாயாம் தெருநாயாம். ஹா ஹா..

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers